Friday, August 24, 2007

இன்றைய நாள்







இன்றைய நாள்

என் வாழ்வில் வந்த..

நாட்கள் எல்லாம்.

எனக்கு மகிழ்சி தராத போது.

நீ.. வந்த இன்றைய நாளே..

என்னை மகிழ வைத்த

இன்ப நாள்.


அன்பும் பாசமும்

நேசமும் தவிப்பும்

மிரட்டலும் தேடுதலும்

காத்திருப்பதும் நட்பும்

மனிதாபிமாணமும்

நடிப்பில்லா உள்ளமும்.

காதலும் கருணையும்.

கனிவும் இனிமையும்

இத்தனையும் சேர்ந்தே

உன்னிடம் கண்டேன்.


அன்றைய நாட்களை விட

இன்றைய நாள் போதும்

நான் வாழ்ந்து..

கொண்டே இருப்பேன்.


ராகினி
வின்னோடு மேளச்சத்தம் என்ன மண்ணோடு சின்னத்தூறல் என்ன..எங்கேதான் சென்றாயோ..?
-------------

எனக்குப் பிடித்த பழைய பாடல்களை எனது கவிதைகளுடன் கேட்க கீழ்வரும் இணைப்புகளை அழுத்துங்கள்... [NEW]






Friday, June 15, 2007

என்னை சுமப்பவனா..நீ.


என்னை சுமப்பவனா..நீ.

---------------------
என்னை சுமப்பவனாய்
நீ..இருந்தால்
நான் வாழ்ந்து கொண்டே
இருப்பேன்.
--
இதுவைர என்னை
கண்ணீர் ஆக்கி பார்த்த.
மனிடப்பிறவியில்
நீ.. மட்டும் என்னை
ஆனந்தக்கண்ணீர்
விடவைத்து விட்டய்.
--
என் கால் கால் வலி
போக 21 தடவை சந்நிதானத்தை
சுற்றி உன் காலில்
வலிகளை ஏற்படுத்தினாய்.
உன் வலி போக நான்
என்ஆனந்தக்கண்ணீரை
மருந்தாய் தருகின்றேன்
உன் பாதங்களை
கழுவி செல்ல.
--
என் அன்பே நாளும் இன்றி நான் இல்லை என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை

Friday, March 30, 2007

மறவாத என் நினைவுகள்

இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்

http://clearblogs.com/piriyaa/


மறந்து போகும்
மானிடப் பிறவியில்
இந்த நினைவு என்றும்
எனை விட்டு மாறாது-
மறவாது.
என் சுவாசத்தோடு..
கலந்துபோன
இந்த இதயம் மீட்டும் கீதம்
தினம் தினம் மீட்டிக்கொண்டே
இருக்கும்.

ராகினி