Tuesday, July 29, 2008

எனக்குள் நீ..இத்தனை வடிவமாக!



எனக்குள் நீ..இத்தனை வடிவமாக!


--------------------------

காதல் அன்பு பாசம் நேசம்

தவிப்பு கருணை நட்பு தாய்மை.

எல்லாவற்றையும் நான்

கொடுத்துவிட்டேன் உன்னிடம்.

இனி யார்போறாடினால் கூட

இல்லை வாதாடினாலும்கூட

அட இறந்து தான் போனாலும்!

எவரும் என் இதயத்தை

எட்டிவிட முடியாது.

இவ்வுலகில்

எல்லாம் மாயை எனச்சொல்வேன்.

எல்லோரும் சுயநலவாதிகள் என்பேன்.

தன்னலங்கருதிகள் என்பேன்.

என் வாழ்வில் சிந்தித்து சந்தித்த

வசந்தங்கள் எல்லாம்

பொய்யால் மாலை 'சூட்டி பார்த்தன.

உனது காலடியில்

நான் வந்த பின்பு தான்

என்னை நான் கண்டு

கொண்டு கொண்டேன்.

உன்னிடம்.

என்றும் என்னை நான் உனக்கே

அர்பணித்து விடைபெறுகின்றேன்.

இந்தக்கவி வரிகளில்

இருந்து.

----

ராகினி.


http://www.raaga.com/playerV31/index.asp?pick=9037&mode=3&rand=0.5744870531422235&bhcp=1

அன்பே அன்பே நீ..யின்றி நான் இல்லையேஅன்பே அன்பே என்னோடு நான் இல்லையே ஓரே முறை ஓரே முறை ஓரே முறை பாரடி (டா)

Wednesday, July 23, 2008

உன் பாதத்தின் ஒலி எப்போ...?



உன் பாதத்தின் ஒலி எப்போ...?


------------------------------------


ஒவ்வொரு இரவுப்பொழுதில்

என் விடியலைத்தேடி

செல்கின்றேன்

உன் காலடியில்
ஒரு குழந்தைபோல்

வந்து விளையாடி மகிழ.
ஆனால்
'சூரியன் தினம் தினம்


வெளிச்சத்தை கொடுத்தாலும்

எனக்கு இன்னமும்

விடியலைத்தரவில்லை.

வருவதும் போவதுமாய்

நிற்கின்றான்.
எனக்கு பகலுக்குள்ளும்

இரவை தந்துசெல்கின்றான்.

இருளக்குள் தத்தளிக்கும்

எனக்கு உன் முகம் காணும்

நாள் தான் வெளிச்சம்

கிடக்கும் நன்நாள்.
காத்திருப்பேன்


உன்பாதஒலியை

கேட்டிட.

விழத்திருப்பேன்.

என் ஆயுள்வரை

அன்புடன்


ராகினி.

தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க.....